விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் senior super singer-9 இடம்பெற்று முடிந்தமையைத் தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான 9-ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வருகை தந்துள்ளார். இதனையடுத்து சிறுவர்களும் அவர் முன் பாடல்களை பாடி வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மைத்திரன் என்ற சிறுவனும், அக்சரா என்ற சிறுமியும் இணைந்து சூப்பராக பாடுகின்றனர்.
பாடும்போது இடையில் லட்டு என்ற சொல் வருகின்றது. உடனே அதற்கு மைத்திரன் நடுவராக இருக்கும் இசையமைப்பாளர் தமன்னை சுட்டிக் காட்டுகின்றார். அதனைப் பார்த்த அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது.
மேலும் இக்குழந்தைகளின் திறமையைப் பார்த்து வியந்த சந்திரசேகர் "உங்க இரண்டு பேருக்கும் தான் இந்த முறை வீடு கிடைக்கப் போகுது என்று நினைக்கிறேன், வேறு யாருக்காவது மாற்றிக் கொடுத்தால் நான் நடுவர்களுடன் சண்டை போடுகிறேன்" எனக் கூறிப் பாராடடுகின்றார்.
இதோ அந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ..!
Listen News!