• Sep 21 2024

ஹைதராபாத்தில் நடிகர் பிரபாஸ் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்..மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பாகுபலி, சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட சமீபத்திய திரைப்படங்கள் மூலம் பான் இந்திய நட்சத்திர நடிகராகவும் இருப்பவர் பிரபாஸ்.

இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ், சலார், Project K உள்ளிட்ட திரைப்படங்களிலும் பிரபாஸ் அடுத்து நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் சூழலில், இந்திய அளவில் இவை எல்லாம் அதிக கவனம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகர்களின் உற்சாகமான கரவொலிகளுக்கிடையே பணிவாகவும், பக்குவமாகவும், புன்னகையுடனும் உரையாடினார்.

இதனிடையே நடிகர் பிரபாஸ் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே ' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் பிரபாஸ் கண்ணைக் கவரும் வெளிர் நிற ஆடைகளுடனும், பிரத்யேக கண்ணாடியை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு பணிகளில் பரபரப்புடன் ஈடுபட்டிருந்தாலும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொண்ட பிரபாஸ், ரசிகர்களுடன் நேரத்தினை செலவிட்டு மகிழ்ந்திருந்தார்.


Advertisement

Advertisement