தமிழ் சினிமாவில் பரபரப்பான நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.கடந்த சில ஆண்டுகளாக தோல்வி முகத்தில் இருந்த சூர்யா சூரரைப்போற்று படத்திற்கு பின்னர் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார்.
என்னதான் OTTயில் வெளியானாலும் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது. அத்தோடு வெளியான ஜெய் பீம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களின் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டினார். இது ரசிகர்களிடத்தே பெரும் பேசு பொருளாக அமைந்தது.இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா.
மேலும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படங்களை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வந்தது.
இந்நிலையில் அந்த கேள்விக்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனினும் இதைத்தொடர்ந்து சூர்யா ஒரே சமயத்தில் மூன்று படங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!