தமிழ் சினிமாவின் தற்காலத்து ரசிகர்களிடையே மீம்ஸ் காமெடி மன்னனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். சில காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்த இவர் தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்னும் படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றது.
இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர்.
கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதமாக நடந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் வெகுவிரையில் தீரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிகர் அர்ஜுன் கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி மலைகா அரோரா
- நடிகை மீரா மிதுன் செய்த ரகளையால் குற்ற புகார் விசாரணையை ஒத்தி வைத்த நீதி மன்றம்-
- சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் ட்ரீட் – இத்தனை அப்டேட்டா?
- ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!