சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள 'தலைவர் 170' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.
இதனையடுத்து இது கமர்சியல் படமாக இருக்குமா அல்லது ஜெய் பீம் போன்ற படமாக இருக்குமா, ரஜினியின் கதாபாத்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றது. இவ்வாறு ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயுள்ள நிலையில் தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது.
அதாவது இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்கும் ரஜினி தூக்கு தண்டனையை எதிர்த்து போராடுபவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!