தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தினை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி வருகின்றார்.இந்த படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த படத்தினை 'கூழாங்கல்' படத்தின் இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!