இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது.
கடைநிலை காவலராக சூரி ட்ரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி ட்ரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இதில் பேசிய இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், தம்முடைய தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், விளம்பர போஸ்டர் வடிவமைப்பாளர் ப்ரொடக்ஷன் மேனேஜர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசியதுடன், இசைஞானி இளையராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசினார். தொடர்ந்து பேசியவர் இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் பணிபுரிந்த மாஸ்டர்கள் பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண்ட் சிவா ஆகியோருக்கு நன்றி சொன்னார்.
அதுபற்றி பேசும்போது, “விடுதலை படத்தின் முதல் பாகத்தின் முடிவில் வரும் டிரெய்ன் Sequence-ஐ மிகவும் ஸ்பெஷலாக பண்ணியிருக்கார். இதில் நடிகர் சூரிக்கு இடது கை சிறிய அளவில் முறிந்து காயம் உண்டானது. அவ்வளவு கஷ்டப்பட்டார். அது ஒரு பெரிய அத்தியாயம்.” என தெரிவித்துள்ளார்.
Listen News!