• Sep 20 2024

வெண்ணிலா வீட்டுக்கு முன்னாடி நின்று நடனமாடிய சூர்யா- கடுப்பான வெண்ணிலாவின் அப்பா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.தற்பொழுது வெண்ணிலாவின் கழுத்தில் யாருக்கும் தெரியாமல் தாலி கட்டியுள்ளார் சூர்யா.

இதனால் அடிக்கடி வெண்ணிலாவுக்கு தொல்லை செய்தும் வருகின்றார்.வெண்ணிலாவின் வீட்டுக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் செய்து வருகின்றார். இதனை அடுத்து தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யா காலையில் எழும்பியதும் கண் விழிக்காமல் வெண்ணிலாவைப் பார்த்தால் தான் கண் முழிப்பேன் என்று வெண்ணிலாவின் வீட்டுக்கு முன் வந்து நிற்கின்றார்.

பின்னர் வெண்ணிலா மொட்டை மாடியில் வந்ததும் வெண்ணிலாவைப் பார்த்த சூர்யா எதிரில் அவருடைய அப்பா நிற்பது கூட தெரியாமல் டான்ஸ் ஆடிக் கொண்டு செல்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement