சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 42.
ஞானவேல் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அத்தோடு மிருனாள் தாகூர் கூட இரண்டாம் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாபெரும் பொருட்செலவில் 3Dயில் உருவாகிவரும் இப்படம் கண்டிப்பாக பாகுபலி, கே.ஜி.எப் ஆகிய படங்களை விட மிகப்பெரிய சாதனையை செய்யும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று இப்படத்தின் தலைப்பு போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள் இணையத்தில் அந்த போஸ்டர் லீக்காகிவிட்டது.
சூர்யா 42 படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன் இப்படி போஸ்டர் லீக்காகிவிட்டதால் படக்குழு மற்றும் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இதோ அந்த போஸ்டர்..
Listen News!