தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.நம்பிக்கைக்குரிய நடிகர்,பிரபலமான நடிகர், மரியாதைக்குரிய நடிகர், சிறப்பான தோற்றம் கொண்ட நடிகர் என அனைத்திலும் தென்னிந்திய அளவில் சூர்யா முதலிடத்தில் இருக்கிறார்.
இவரின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 21ஆம் தேதி முதல் கேரளாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் சரித்திரகால காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் ஏப்ரல் மாதம் சூர்யாவின் பிறந்தநாளின் போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திருவிழா கால திரைப்படமாக இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தமிழ் உள்பட 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா சரித்திர கால மற்றும் நிகழ்கால கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ’வீர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
Listen News!