• Sep 20 2024

நயன்தாராவின் திருமணத்தில் தம்பதியர்களாகக் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா- செம கியூட்டாக இருக்கின்றார்களே

stella / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஜோடியாக விளங்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த மாதம் 9ம் திகதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணத்தை அடுத்து திருப்பதி கோயிலுக்கு கணவன் மனைவியாக இருவரும் சென்றிருந்தனர். அதே போல பத்திரிகையாளர்களைச் சந்தித்து தமது நன்றியைத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து ஹனி மூனுக்கும் சென்ற இவர்களது புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. திருமணக் கொண்டாட்டத்தை முடித்த இவர்கள் தற்பொழுது படப்பிடிப்புக்களில் பிஸியாக கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இவர்களுக்கு திருமணம் முடிந்து 1 மாதம் ஆகி விட்டதால் விக்னேஷ் சிவன் தனது திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்பொழுது சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement