• Sep 20 2024

தாலியை மாற்றிக் கட்டிய வெண்ணிலா..? விபத்தில் சிக்கிய சூர்யா... பரபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவின் அம்மாவிடம் "கோவிலில் அம்மனுடைய தாலி அதுவாக அறுந்து விழுந்து விட்டதாகவும், அதற்குப் பதிலாக பெண்கள் அனைவரும் தாலிக் கயிற்றை மாற்றிக் கட்டிக்கணுமாம், இல்லேன்னால் வீட்டுக்காரருக்கு ஏதாவது பிரச்சினை நடந்துவிடுமாம்" எனக் கூறப்படுகின்றது.


இதனையடுத்து வெண்ணிலாவின் அம்மாவும் தாலிக் கயிற்றை மாற்றிக் கட்டுகின்றார். இவற்றை எல்லாம்  அவதானித்தபடி நின்ற வெண்ணிலா நம்மளும் மாற்றிக் கட்ட வேண்டுமா என யோசிக்கின்றார். 


மறுபுறம் பைக்கில் வந்து கொண்டிருந்த சூர்யா வாகனம் ஒன்றில் மோதி விபத்திற்குள்ளாகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement