• Sep 21 2024

வெண்ணிலாவின் பெற்றோர் முன்னாடியே சேட்டைகள் செய்யும் சூர்யா- என்ன தில்லு தான் உங்களுக்கு- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

அதிலும் சூர்யா யாரைத் திருமணம் செய்து கொள்வார் வெண்ணிலாவையா அல்லது ஷிவானியையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க சூர்யா வெண்ணிலாவை ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் வெண்ணிலா வீட்டுக்கு சூர்யா சென்றுள்ளதோடு யாருக்கும் தெரியாமல் வெண்ணிலாவின் ரூமுக்குள் இருக்கின்றார். வெண்ணிலாவின் அம்மா வந்ததும் கட்டிலுக்கு கீழே ஒழிந்து கொள்கின்றார். பின்னர் கட்டிலில் வெண்ணிலாவின் அப்பாவும் அம்மாவும் துாங்க வெண்ணிலாவும் சூர்யாவும் கீழே படுத்திருக்கின்றனர்.

அதிலும் சூர்யா வெண்ணிலா மீது செய்யும் சேட்டைகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அத்தோடு வெண்ணிலாவின் அப்பாவிடம் சூர்யா பிடிபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement