தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் சூர்யாவும் ஒருவராவார் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் . இதற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக கமல்ஹாசன் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குநராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.
இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குநராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குநராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.
விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "மரியாதை -அன்பு" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது செம டிரெண்டாகி வருகிறது.அத்துடன் ரசிகர்கள் லைக்ஸையும் குவித்து .வருகிறார்கள்
Listen News!