• Sep 20 2024

நடிகர் கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சூர்யா- வெளியான ஷாக்கிங் statement

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவல் அண்ணன் தம்பிகளாக இருந்து கலக்குபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்.

இவ்வாறுஇருக்கையில் சிறு வயது முதலே அண்ணன் சூர்யாவிடம் அடி வாங்குவாராம் கார்த்தி. எப்போதாவது சோர்வாக இருக்கும்போது அண்ணன் சூர்யாவிடம் தண்ணீர் எடுத்துத் தரும்படி கேட்டால், கவுண்டமணி மீது கிரீஸ் டப்பாவை எட்டி உதைக்கும் செந்தில் போல், தன் மீது தண்ணீரை எட்டி உதைத்து குடி என்று சூர்யா கூறுவாராம்.

இதுவே எனக்கு ஒரு அக்கா இருந்திருந்தால், அந்தச் சமயத்தில் எனக்கு டீ போட்டு குடுத்திருப்பார்கள். அதனால் அக்கா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை வைத்துக் கொண்டே கார்த்தி மேடையில் பேசியிருப்பார்.

பள்ளியில் படிக்கும் காலக்கட்டத்தில், கார்த்திக்கு பள்ளிக்குச் செல்வது பிடிக்கும் என்பதால் முன்னரே கிளம்பி அமர்ந்திருப்பாராம். ஆனால் 8.15 மணிக்கு பாடசாலை என்றால் அப்போதுதான் சூர்யா குளிக்கச் செல்வார்.

மேலும் பல நேரங்களில் அவரால் தானும் பாடசாலைக்கு தாமதமாக சென்றுள்ளதாகவும், பாடசாலையில் தாமதமாக வரும் மாணவர்களை தண்டிக்கும் பொறுப்பில் சூர்யா இருந்ததால், லேட்டாக சென்றாலும் அந்த லீடர் பேட்ச்சை எடுத்து சட்டையில் குத்திக் கொண்டு லேட்டாக வந்த மாணவர்களுடன் தன்னையும் சேர்த்து தண்டித்துள்ளதாகவும் கார்த்தி தன்னுடைய பாடசாலை நினைவுகளை சொல்லியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தவுடன் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவதாக ஒரு செய்தி வந்திருந்தது.மேலும் அதில் நகரத்து இளைஞனாக தோற்றமளித்த கார்த்தியை பார்த்து, பத்து பேரை அடிக்கக் கூடிய நபராக மாறுங்கள். இல்லையென்றால் கிண்டல் செய்து விடுவார்கள் என்று இயக்குநர் அமீர் கூறினாராம். தன் வாழ் நாளில் அண்ணனிடன் அடி வாங்குவதையே வேலையாக வைத்திருந்த தனக்கு பத்து பேரை அடிக்கக் கூடிய கதாப்பாத்திரம் கிடைத்தது என்று கார்த்தி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நந்தா படத்தின் படப்பிடிப்பிற்காக சூர்யா கும்பகோணத்தில் தங்கியிருந்தாராம். அப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த கார்த்தி இந்தியா வந்துள்ளார். அதற்கு முன்பு சூர்யா மீது அவ்வளவு பாசமாக இருந்ததில்லை.

ஆனால் இந்தியா வந்த அன்றே அண்ணனை பார்க்க வேண்டுமென்று தோன்றியதால் உடனே கும்பகோணம் சென்று விட்டேன். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று கதவை தட்டியதும், அரை மொட்டையடித்த ஒரு கருப்பான நபர் கதவை திறந்ததாகவும், அது சூர்யாதான் என்று தெரியாமல்"அண்ணன் இல்லையா?" என்று அவரிடமே கேட்டதாகவும் கார்த்தி தன் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement