• Sep 20 2024

ரசிகரின் மனைவியின் கனவை நனவாக்கிய சூர்யா- தொழிலும் ரொம்ப முக்கியம் என அட்வைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சூர்யா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய காக்க காக்க, பிதாமகன், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பம் முதலே சூர்யாவின் நடிப்பை கொண்டாடித் தீர்த்த அவரது ரசிகர்கள், வெற்றி, தோல்வி என எல்லா காலங்களிலும் அவருடன் உறுதியாக நின்றனர். ரசிகர்களின் பலத்தை உணர்ந்த சூர்யா, அவர்களின் நலனையும் தனது நலனாகவே பார்த்தார்


திரைப்படங்களில் நடிப்பதும், நல்ல படங்களை தயாரிப்பதும் மட்டும் போதாது என கருதிய சூர்யா, ஏழை மாணவர்களின் நலனுக்காக 'அகரம் அறக்கட்டளை' தொடங்கினார். பொருளாதாரத்தில் வசதி குறைந்த மாணவ, மாணவிகளின் கல்வி கனவை நனவாக்கியது, சூர்யாவின் அகரம் அறக்கட்டளை. சூர்யாவின் இந்த முயற்சிக்கு பெரிய துணையாக இருந்தது அவரது ரசிகர்களே எனலாம். 


அத்தோடு இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவுடன் அவரது ரசிகர்கள் பயணித்துள்ளனர்.இந்த நிலையில், தனது ரசிகர்மன்ற செயலாளரின் மனைவியின் கல்வி கனவையும் நனவாக்கியுள்ளார் சூர்யா. மதுரை மாவட்ட ரசிகர்மன்ற செயலாளர் மனோஜ் என்பவரின் மனைவி தீபிகா, மேற்படிப்பு படிக்க ஆர்வமாக இருந்துள்ளார். இதனையறிந்துகொண்ட சூர்யா, அவரை அயர்லாந்து நாட்டுக்கு அனுப்பி படிக்க உதவி செய்துள்ளார்.


 அதுமட்டும் இல்லாமல், அவரை வழியனுப்ப ஏர்போர்ட் செல்ல முடியாததால், செல்போனில் அழைத்து வாழ்த்தியுள்ளார் சூர்யா.படப்பிடிப்பு காரணமாக சூர்யா நேரில் வரமுடியாமல் செல்போனில் அழைத்து வாழ்த்தியதும் தீபிகா ரொம்பவே நெகிழ்ந்துபோனார். நடிகர் சூர்யா தீபிகாவை செல்போனில் வாழ்த்திய ஆடியோ வைரலாகி வருகிறது. அதில், "நல்லா இருக்கீங்களா மா என கேட்கும் சூர்யா, மேற்படிப்புக்காக நீங்க அயர்லாந்துக்கு போறது ரொம்பவே சந்தோஷம். அதுவும் உங்க குடும்பத்துல உள்ளவங்க சப்போர்ட் பண்றது மகிழ்ச்சியா இருக்கு. தொழிலும் முக்கியம் அதைவிட படிப்பில் அதிக கவனம் செலுத்துங்க" என அன்போடு பேசுகிறார் சூர்யா. இதனால் நெகிழ்ந்துப் போன தீபிகா, சூர்யாவுக்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement