• Sep 20 2024

ஷிவானியை இரண்டாவது திருமணம் செய்ய ஓகே சொன்ன சூர்யா- அதிர்ச்சியில் உறைந்த வெண்ணிலா- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

இதில் சூர்யா யாருக்கும் தெரியாமல் வெண்ணிலாவுககு கோயிலில் வைத்து தாலி கட்டி விட்டார்.இருந்தாலும் வெண்ணிலா சூர்யாவை கணவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னுடைய அப்பாவுக்கு பயந்து கொண்டே இருக்கின்றார்.


இதனால் சூர்யாவிடம் அடிக்கடி மோதலில் ஏற்பட்டு வருகின்றார். உங்களுக்கு ஏற்றது போல வாழ்க்கையையும் முடிவு பண்ணச் சொல்கின்றார். வெண்ணிலாவின் வார்த்தைகளைக் கேட்டு கோபமடைந்த சூர்யா தனது பெரியம்மாவிடம் ஷிவானியைத் திருமணம் செய்ய சம்மதம் எனத் தெரிவிக்கின்றார்.

இதனால் அவரது பெரியம்மா வெண்ணிலாவிடம் சென்று சூர்யாவுக்கு திருமணத்திற்கான நாள் குறித்து விட்டதாகச் சொல்ல வெண்ணிலா அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement