நடிகர் சூர்யா சமீபகாலமாக நடித்து வரும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது. அதிலும் இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கேமியோ ரோலில் நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்படும் நடிகராக மாறியுள்ளார்.
இடையே வாடிவாசல் படத்திற்காக சூர்யா காளையுடன் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் வெளியிடப்பட்டன.இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தனது 42வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
சென்னை ராமாபுரத்தில் படத்தின் பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!