• Sep 20 2024

சூர்யாவின் ஜெய் பீம் பட இயக்குநரின் அடுத்தப்படம்-இது தான் கதையா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக திகழும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

மேலும் இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை, ஆனால் இப்படத்திற்கு முன் வெளியாகியிருந்த ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.

இவ்வாறுஇருக்கையில் சூரரைப் போற்று படத்திற்காக தற்போது சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது, அதோடு அப்படத்திற்காக 5 விருதுகள் கிடைத்துள்ளன.

அப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படம் வெளியானது, இப்படத்தை ஞானவேல் அவர்கள் இயக்கியிருந்தார்.

மேலும் இப்படம் சில அரசியல்வாதிகளால் சர்ச்சையாக பேசப்பட்டது, ஆனால் படம் வெற்றிகரமாக ஓடி இருந்தது.

ஜெய் பீம் படம் மூலம் வெற்றிகண்ட டிஜே ஞானவேல் அடுத்தும் ஒரு சர்ச்சை கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது தென்னிந்தியாவில் பிரபலமான ஹோட்டல்களை நடத்தி வந்த கடைசியில் கொலை செய்யப்பட்ட ஒரு தொழிலதிபரின் கதையை இயக்க இருக்கிறாராம் என கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement