தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய எதற்கும் துணிந்தவன் என்னும் திரைப்படம் கலவையான விமர்னங்களையே பெற்றது. இப்படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 41 படத்தினை இயக்குநர் பாலா இயக்கி வருகின்றார். இப்படத்திற்காக ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பாலா இந்த படத்திற்காக கன்னியாகுமரியில் கடற்கரை பகுதியில் செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சூர்யா மற்றும் பாலாவுக்கு இடையே படப்பிடிப்பில் வாக்குவாதம் நடைபெற்றது , அதன் பின் சூர்யா கோபமாக கிளம்பி சென்றுவிட்டார் என்றும் தற்போது தகவல் பரவி வருகிறது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பாலா - சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு என தகவல் பரவ அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்போது 2டி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
அதாவது முதற்கட்ட ஷூட்டிங் கன்னியாகுமரில் முடிந்துவிட்டது என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் ஜூன் மாதம் தொடங்கும் என அறிவித்து உள்ளனர். அதற்காக அங்கு செட் போடும் பணிகள் நடந்து வருகிறதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!