• Sep 20 2024

சூர்யா-ஜோதிகா வீட்டில் இன்று நடக்கவுள்ள விசேஷம்... வாழ்த்து மழையில் நனையும் தம்பதிகள்... ஓஹோ இதுதான் விஷயமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களினால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு ஜோடி என்றால் அது சூர்யா-ஜோதிகா தம்பதியினர் தான். இவர்களைத் தொடர்ந்து எத்தனை எத்தனையோ ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி இருப்பினும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் இவர்களுக்கு உண்டு. 


அந்தவகையில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா. இப்படத்தினைத் தொடர்ந்து பின்னர் 'உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல்' உள்ளிட்ட படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.


இவ்வாறாக பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ள இவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள். முதலில் தன்னுடைய மகன் சூர்யாவின் காதலுக்கு நோ சொன்ன சிவகுமார், பின்னர் சம்மதம் தெரிவித்து ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். 


இவர்கள் இருவரின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ்.

நடிகர் சூர்யா - ஜோதிகாவின் திருமணம் ஆனது கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்றுடன் தங்களுடைய 16ஆண்டு கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்து 17-ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.


இவர்களின் இந்த சக்சஸ் நிறைந்த வாழ்க்கைக்கும், திருமண தினத்திற்கும் ரசிகர்கள் மட்டுமன்றி பல திரைப்பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement