நடிகர் சூர்யா தனது தம்பி, தங்கை, அம்மா, மனைவி என மொத்த குடும்பத்துடன் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் ரசிகர்கள் அதை பகிர்ந்து வருவதைக் காணலாம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெய்பீம் ,எதற்கும் துணிந்தவன், சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.
இது தவிர கெஸ்ட் ரோல்களிலும் சூர்யா நடித்து வருகின்றார். அந்த வகையில் விக்ரம் மற்றும் ராக்கெட்டரி போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இதில் விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ் என்னும் கதாப்பாத்திரம் இவரின் கெரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.
இதனை அடுத்து வணங்கான் மற்றும் வாடிவாசல் ,சூர்யா 42 ஆகிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் வணங்கான் மற்றும் சூர்யா 42 ஆகிய படங்களன் படப்பிடிப்பானது நடைபெற்று வருகின்றது. வாடிவாசல் படத்தின் ஷுட்டிங்கும் விரைவில் ஆரம்பமாகும் என்று கூறப்படுகின்றது.
இந்த நேரத்தில் தான் நடிகர் சூர்யாவின் சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா தனது மனைவி, அம்மா, தம்பி, தங்கை குடும்பத்துடன் இணைந்து சூப்பரான புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் படு வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் சூர்யாவின் குடும்பம் நடிப்பதைத் தாண்டி விவசாயத்தில் ஈடுபடுவோருக்கும் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!