தனி ஒருவன் படத்திற்கு பின்னர் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ’இறைவன்’. இப் படத்திற்கு யுவன் சங்கர்ராஜாஇசையமைத்துள்ளார். ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகி மொழிகளில் இறைவன் திரைப்படம் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இப்படத்தினை சைக்கோ திரில்லர் பாணியில் இயக்குனர் ஐ.அஹமது உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் ஜெயம் ரவி இப்படம் குறித்து வெளிடிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். இந்நிலையில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய ஜெயம் ரவி, அஹமத் இருவரும் படத்துல இன்னொருத்தர் நல்லா நடிச்சு இருக்காரு. கேமியோன்னு கூட சொல்லலாம் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி நாங்க எதுவும் சொல்ல இல்லை என கூறி சமாளித்துள்ளார். இதனால் 'இறைவன்' படத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!