மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹோபிதா துலிபலா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரஹ்மான் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
இப்படத்தின் முதல் வாரம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் பொன்னியின் செல்வன் 2 வெளியாகியுள்ளது .இப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமும் இந்தப் படத்தை ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் பார்ப்பதற்காக சென்னை வடபழனியில் உள்ள Palazzo திரையரங்குகளுக்குச் சென்றார்.
பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஸ்பெஷல் ஷோவில் நடிகர்கள் விக்ரம், ஜெயராம் ஆகியோரும் பங்கேற்றனர். ஆனால், ஐமேக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பொன்னியின் செல்வன் 2 படத்தை திரையிட முடியவில்லை. இதனால் விக்ரம், ஜெயராம் உட்பர அனைவருமே ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து சாதாரண திரையில் பொன்னியின் செல்வன் 2 திரையிடப்பட்டது.
சீயான் விக்ரம் உடன் நடிகர் ஜெயராமும் பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார். ஆழ்வார்கடியான் கேரக்டரில் நடித்துள்ள ஜெயராம் உடனும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் சில மணி நேரங்களுக்கு பளாஸோ திரையரங்கில் பரபரப்பு காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!