விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் அமுதவாணன்.இதனை அடுத்து 2016ம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.அதிலும் குறிப்பாக, இவரின் நடனம் பெரிதளவு பேசப்பட்டது.
அவ்வாறு இருக்க இந்த வாய்ப்பினை பெற்ற சம்பவத்தை தற்பொழுது இன்டர்வியூ ஒன்றில் பதிந்துள்ளார்.மேலும் இயக்குநர் பாலா தன்னை சூர்யாவை போல் மிமிக்கிரி செய்ய சொன்னதாகவும், அதை தொடர்ந்து அவரின் அப்பாவான சிவக்குமாரை போலவும் பேச சொன்னாராம். அவ்வாறு முதல் முதலில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதால் இயக்குநரை கண்டு பயத்தில் இருந்ததாகவும் தன் அனுபவத்தை கூறினார்.
அதன்பின் தன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பாலா, தான் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கூறினாராம். அப்படத்தின் படப்பிடிப்பின் போது முகத்தில் கை வைத்துக் கொண்டிருந்த அமுதவாணனை பார்த்து முதலில் மீசையை எடுத்துரு என்று கண்டிஷன் போட்டுள்ளார்.அதை தொடர்ந்து அக்கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் தலைமுடியையும் மாற்றி விட்டதாக கூறினார்.
முதலில் இதையெல்லாம் ஏற்க கடினமாக இருந்தாலும் இவ்வளவு பெரிய இயக்குநர் இடம் வாய்ப்பு பெறுவது சுலபமில்லை என எண்ணி, கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டதாக கூறினார் அமுதவாணன்.மேலும் இப்படத்தில் கிடைத்த விமர்சனத்தை கொண்டே தனக்கு அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் பாலாவை பார்த்தால் கடுமையாக நடந்து கொள்வது போல இருக்கும், ஆனால் அவர் தன் பணியின் பொறுப்பாக இருப்பதாகவும், மேலும் தன் நடிப்பினை கண்டு அவரே புகழ்ந்ததாகவும் கூறி பெருமிதப்பட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!