• Sep 20 2024

கையை எடுங்க ..எனக்கு வெட்கமாக இருக்கு...ரச்சிதாவிடம் கூறும் ராம்-தீயாய் பரவும் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் 9ஆம் தேதி ஆரம்பமாகி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.21போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 பேர் மட்டுமே உள்ளார்கள்.அதிலும் குறிப்பாக இந்த வாரம் ராம் குறைநத வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது. 

தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் இரு அணி போட்டியாளர்களும் தீவிரமாக தங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடி வருவதால் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது மட்டுமின்றி சண்டை சச்சரவு இல்லாத நாளே இல்லையென்ற அளவில் பிக்பாஸ் வீட்டில் தற்போது நிலைமை உள்ளது.



இவ்வாறுஇருக்கையில்  இந்த சண்டை சச்சரவுக்கு நடுவிலும் சில க்யூட் காட்சிகளும் இடம் பெற்று வருவதை மறுக்கமுடியாது. குறிப்பாக உள்ளே இருந்து வரும் பொருளை எடுப்பதற்காக போட்டியாளர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் ராம், ரக்சிதாவிடம் கையை எடுங்கள், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

அத்தோடு ரக்சிதா தனது அணிக்காக உள்ளே இருந்து வரும் பொருளை எடுப்பதற்காக கையை தயாராக வைத்திருக்கும் நிலையில் அந்த கை, ராம் மீது படுகிறது. இதனால் ராம், ‘எனக்கு வெட்கமாக இருக்கிறது, கையை எடுங்கள், எங்கே கையை வைத்து இருக்கிறீர்கள் பாருங்கள்’ என்று வெட்கத்துடன் சொல்கிறார்.



ஆனால் தொடர்ச்சியாக ரக்சிதா கையை எடுக்காமல் இருப்பதை அடுத்து யாராவது இவங்களை கையை எடுத்து சொல்லுங்க என்று பஞ்சாயத்தை கூட்டுகிறார். மேலும் இந்த க்யூட் காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement