தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இய்கி வரும் இயக்குநர் தான் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் “மாமன்னன்”. இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகின்றார். இவருடன் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளிவந்தது. இப்பாடலை வடிவேலு பாடியிருந்தார். எளிய மனிதனின் துயரத்தை கூறுவது போல் அந்த பாடல் அமைந்தது. வடிவேலுவின் குரல் அப்பாடலை கேட்பவர்களின் இதயத்தை கணமாக்குவது போல் இருந்தது. அந்த பாடலை கேட்டவுடன் கண்ணீர் வந்துவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.
மாரி செல்வராஜ் இதற்கு முன்பு இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் ஜாதி வேற்றுமையை அடிப்படையாக வைத்து உருவான திரைப்படங்கள் ஆகும். இத்திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் ஒரு பக்கம் இத்திரைப்படத்திற்கு விமர்சனங்களும் எழுந்தது.
இந்த நிலையில் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த சக காமெடி நடிகரான டெலிஃபோன் ராஜ், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அதில் அவர், “மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படங்கள் அத்தனையும் ஜாதி அரசியல் பேசுவதுதான். கூடிய விரைவில் மாரி செல்வராஜே அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த காலகட்டத்தில் நாம் ஜாதி ஒழிய வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம். என்றைக்கோ நடந்த விஷயத்தை மீண்டும் ஜாதியை கொண்டு திணிப்பது போல் இருக்கிறது. இது ஒரு நல்ல செயல் கிடையாது. ஏன் வெள்ளைக்காரனை பற்றி எடுக்கமாட்டிக்கிறீங்க. அவுங்க பண்ணாத கொடுமையா?” என பேசியிருந்தார்.
Listen News!