• Sep 20 2024

ஊடகத்தினரை தாக்கிய தமன்னாவின் பாதுகாவலர்கள்-பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவின் பாதுகாவலர்கள் ஊடகத்தினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் தான் தமன்னா.இதுவரைக்கும் 65ற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய், அஜித் ,ஜெயம்ரவி, விஷால் ,கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.



இந்நிலையில் இவர்  நடித்துள்ள பப்ளி பவுன்சர் என்ற படம் வரும் செப்படம்பர் 23ஆம் தேதி டிஸ்ளி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த தமன்னாவை புகைப்படம் எடுக்க ஊடகத்தினர் அனுமதி கேட்டுள்ளனர்.



இதற்கு மறுப்பு தெரிவித்த பாதுகாவலர்கள் ஊடகத்தினரை அவதுாறாக பேசியதோடு தாக்கியுள்ளனர்.


இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement