• Sep 20 2024

முக்கிய பிரபலம் திடீர்க் கைது... பீதியில் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆகிய டத்தோ மாலிக் என்பவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமாப் பிரபலங்கள் மத்தியில் பெரும் பீதியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.


அதாவது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் மீமிசல் கிராமத்தைச் சேர்ந்த இவர் மலேசியாவிற்கு சென்று அங்கு ஜவுளிக் கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர், தனது முயற்சியினால் திடீரென தொழிலதிபராக உயர்ந்தார். 


இதனைத் தொடர்ந்து திரைப்பட விநியோகம், தயாரிப்பு போன்ற தொழில்களிலும் தங்கம், வைர நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள் பலரையும் மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று அவர்களை வைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார். மேலும் நடிகைகளை தனி விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து தருவதால் இவரை 'முதலாளி’ என்று அழைத்து வந்தார்கள். 


இந்த நிலையில் இவர் தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் மலேஷிய ஊழல் தடுப்பு ஆணைய போலீஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறாக 'முதலாளி' என அழைத்து வந்த டத்தோ மாலிக் கைது செய்யபட்டுள்ள சம்பவம் ஆனது தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Advertisement

Advertisement