• Sep 20 2024

'பருத்திவீரன்' திரைப்பட நடிகர் காலமானார்... அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படம் 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலமாகத் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். இவருடன் இணைந்து பிரியாமணியும் நடித்திருந்தார். இதில் சிறப்பாக நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் செவ்வாழை ராசு. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக மைனா, கிழக்கு சீமையிலே, கந்தசாமி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு சிகிச்சைபலன் இன்றி தனது 70வயதில் இன்றைய தினம் காலமானார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இவரின் மரணம் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Advertisement