• Sep 21 2024

அர்ஜுனை பற்றிய உண்மையை வெளியே கொண்டு வர கோதை போட்ட புதுப் பிளான்- சரஸ்வதி மீது கோபத்தில் இருக்கும் தமிழ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதியிடம் தமிழ் ரொமான்ஸ் பண்ண வருகின்றார். ஆனால் சரஸ்வதி உங்களுக்க ஒரே அதான் நினைப்பு என்று சொல்ல தமிழ் கோபித்துக் கொள்கின்றார்.அப்போது சரஸ்வதி நான் சொல்லுறதை இவர் கேட்கவே மாட்டாரு, இவர் சொல்லுறதை நான் கேட்கனுமா என்று கேட்கின்றார். இதனால் தமிழ் கோபித்துக் கொண்டு துாங்குகின்றார்.


தொடர்ந்து விடிந்ததும் கோதையும் நடேசனும் நமச்சியைக் கண்டு கதைக்கின்றனர். அப்போத கோதை அர்ஜுனை பற்றி தெரியனும் என்றால் அவன் வழியில் பேய் தான் கண்டு பிடிக்கனும நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று சொல்ல நமச்சியும் உதவி செய்வதாக சொல்கின்றார். இப்போது கோதை நீ இந்த உண்மை எல்லாம் தெரிஞ்ச இன்னொருத்தர் இருக்கிற மாதிரி ஒருவரை செட் பண்ணி பேச வைக்கனும்.

அப்படி அந்த நபர் பேசுவதை அர்ஜுன் நம்பி அவரைப் பார்க்கப் போகனும். அந்த நேரம் நாங்க அர்ஜுன் பற்றிய உண்மையை அறிஞ்சிடலாம் என்று சொல்கின்றார். அதற்கு நமச்சியும் ஒகே சொல்கின்றார். மறுபுறம் இரவு நடந்த விஷயத்தை சரஸ்வதி வசுவிடம் சொல்ல வசு சிரிக்கின்றார். மாமாவை எப்படியாவது சமாதானப்படுத்திடுங்க என்று சொல்கின்றார்.

பின்னர் எல்லோரும் சாப்பிடுவதற்காக இருக்கும் போது அர்ஜுனுக்கு போன் வர அர்ஜுன் வெளியே சென்று கதைக்க செல்கின்றார்.அப்போது ஒருவர் போன் பண்ணி கத்தியால் குத்திய விஷயம் எல்லாம் தெரியும். அது பற்றிய வீடியோ என் கிட்ட இருக்கு என்று சொல்ல அர்ஜுன் பயந்து போய் பணம் தருகிறேன் அந்த வீடியோவைத் தரும்படி கூறுகின்றார்.


பின்னர் அர்ஜுன் கோஃல் பேசிட்டு வீட்டுக்குள் வரும் போது அவரின் செயற்பாடுகளைப் பார்த்து கோதையும் நடேசனும் சந்தோஷப்படுகின்றனர். அத்தோடு அர்ஜுன் பசிக்கவில்லை, கம்பெனிக்கு லேட்டாகிட்டு என்று எழும்பிப் போகின்றார். தொடர்ந்து தமிழை சமாதானப்படுத்த சரஸ்வதி sorry என்று எழுதிய தோசையை செய்து கொடுக்கின்றார். ஆனால் தமிழ் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சரஸ்வதியிடம் கோபம் போல காண்பித்துக் கொண்டு போகின்றார். பின்னர் நம்சி கோதை பேசிய விஷயத்தை சரஸ்வதியிடம் சொல்லுவதோடு இன்டைக்கு அர்ஜுன் பற்றிய உண்மை எல்லாம் தெரிய வரும் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement