• Sep 20 2024

உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டான்- இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பட்டிமன்ற நடுவரும் பிரபல மேடைப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் நேற்றைய தினம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.  

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கவிப் பேரரசு வைரமுத்துவும் தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார்.

 அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.இவருடன் இணைந்த ரசிகர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement