• Sep 20 2024

ரவுடிகளிடமிருந்து தப்பித்த தமிழ்! உயிருக்கு பயந்து எங்கே சென்றார் தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது.

அதன்படி இன்றைய எபிசோடில், மருத்துவமனையிலிருக்கும் மேகனா கண்விழித்த நிலையில், அவருடைய மாமா மேகனாவிடம், 'அந்த இரண்டு பேரையும் குடோனில் கட்டி போட்டு வைத்திருக்கன், உன்ட பதிலுக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ என்ன சொல்றியோ அதை செஞ்சுடலாம்' என பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் டாக்டர் வர, வெளியே செல்கிறார் மாமா. இதன்போது டாக்டர், 'உங்க உடம்பில் எந்த தீக்காயமும் இல்ல, நல்ல வேலை உங்க உடம்பில் தீக்காயம் இல்ல. இதுக்கு காரணம் அவர் தான். அவர் தான் உங்களை காப்பாற்றினார். நீங்க அவருக்கு தான் நன்றி சொல்லனும்' என கூறுகிறார்.

மற்றொரு பக்கம், தமிழ் மற்றும் நமச்சியை கட்டிப்போட்டு வைத்துள்ளார்கள் இதன்போது ரவுடிகள், 'மேக்னா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா இந்த பெங்களூரிலேயே அவங்க கை அசைச்சா என்ன வேணாலும் நடக்கும் அவங்க கிட்டயே நீ வம்பு பண்றியா உன்னை இன்னைக்கு பொணமாத்தான் திரும்பி அனுப்புவோம்' என ரவுடிகள் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


இதன்போது, சாப்பிடுவதற்காக அவர்களின் கைகளை கழட்டி விட அந்த சமயம் அங்கிருந்து எஸ்கேப் ஆக பார்க்கிறார்கள். இதையடுத்து அங்கு வந்த  மேக்னாவின் மாமா, 'அவங்க ரெண்டு பேரும் எங்க' என கேட்க 'கட்டிப்போட்டு வச்சிருக்கம்' என்று பேசிக்கொண்டே உள்ளே போக அங்கு அவர்கள் தப்பித்து போயுள்ளனர்.

இன்னொரு பக்கம் கோதை மற்றும் சரஸ்வதி நடந்து வருவதை பார்த்து 'அதற்குள் நடுத்தெருவுக்கு வந்துட்டீங்களா, இன்னும் நாலு நாள் இருக்கு' என நக்கலாக பேசுகிறார். அந்த சமயத்தில் 'நீ நினைக்கிற மாதிரி நாங்க நடுத்தெருவுக்கு வரமாட்டோம் அதனை பார்த்து நீ சிரிக்கவும் முடியாது சீக்கிரம் மூஞ்ச கழுவி வச்சுக்கோ உன் மூஞ்சில என் மகன் கரிய பூசுவான்' என கூறுகிறார்.

இதேவேளை, ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தமிழ், மருத்துவமனையில் இருக்கும் மேக்னாவிடம் சென்று நடந்த அனைத்தையும் கூறுகிறார். அதற்கு மேக்னா, 'ஏதாவது பண்ணிடுவோம்னு பயத்தில் வந்து பேசுகிறாயா' என கேக்க,  'அதெல்லாம் கிடையாது ஒரு பெண்ணை கைநீட்டி அடித்தது தப்பு தான் உங்க மேலயும் கொஞ்சம்  தப்பு இருக்கு அதனாலதான்  நான் அப்படி செஞ்சேன், அது மட்டும் இல்ல உங்கள காப்பாத்த தான் அப்படி செஞ்சன்' என புரிய வைக்கிறார் தமிழ். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Advertisement

Advertisement