• Sep 20 2024

அர்ஜுனை காலால் எட்டி உடைத்த தமிழ்- கோவிலில் கதறி அழுத கோதை- கடும் அதிர்ச்சியில் ராகினி- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுன் சொத்தை மாற்றி எழுதியதால் வீட்டை விட்டு வெளியேறிய கோதை கோவிலில் நின்று அழுது கொண்டிருக்கின்றார். நான் என்ன பாவம் செய்தோம். நேர்மையாகத் தானே நடந்தோம். நேர்மையாக நடந்ததால் தானே என் பையன் கூட தப்பு பண்ணி இருப்பான் என்று வீட்டை விட்டு அனுப்பினேன். ஆனால் அப்போ என்னுடைய நேர்மையே பொய்யா போச்சு என்று கதறி அழுகின்றார்.


இதனால் சரஸ்வதியும் நடேசனும் சமாதானப்படுத்துகின்றனர். தொடர்ந்து சரஸ்வதி வாங்க எங்க வீட்டுக்கு போகலாம் என்று அழைக்க,நடேசன் அங்கே எப்பிடிம்மா வரமுடியும் நாங்க வரல என்கின்றார்.அப்போது வசுவின் தம்பி தங்களுடைய வீட்டுக்கு வரச் சொல்லவும் அங்கேயும் போக மறுத்து விடுகின்றனர். இதனால் சரஸ்வதி தமிழ் வந்து கூப்பிட்டா வருவீங்க தானே இருங்க வாறேன் என்று தமிழைப் பார்க்க போகின்றார்.

இதனால் தமிழின் கம்பெனிக்கு வந்த சரஸ்வதி, அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிய வந்து விட்டதாக செசால்ல நமச்சி சந்தோஷப்படுகின்றார். அப்போது சரஸ்வரி, உண்மை தெரிய வந்தும் எந்த பிரஜோசனமும் இல்லை, அந்த அர்ஜுன் அத்தையின் சொத்து கம்கெனி எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கிட்டான். இந்த விஷயம் எல்லாமே ராகினிக்கும் தெரியும் என்கின்றார்.


இதைக் கேட்ட தமிழ் அதிர்ச்சியடைகின்றார். அத்தோடு தமிழ் சரஸ்வதியையும் நமச்சியையும் கோவிலுக்கு நீங்க போங்கஇ நான் பின்னாடியே வாறேன் என்று கூறிவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு போகின்றார். தமிழைக் கண்டதும் அர்ஜுன் நக்கலாகப் பேச தமிழ அர்ஜுனை காலால் எட்டி உதைக்கின்றார்.அத்ததோடு என் குடும்பத்திற்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கும் அதுக்காக நீ அவங்களுக்கு என்ன வேணும் என்றாலும் பண்ணலாம் என்று நினைக்காத என்று அடிக்கின்றார்.


இடையில் ராகினி வந்து தடுக்கவும் ராகினியையும் தமிழ் அடக்குகின்றார். அத்தோடு உன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்ட நினைச்சத செய்த முடிச்சிட்ட, இனிமேல் நான் தான் உனக்கு எமன் என்று அர்ஜுனுக்கு வார்னிங் கொடுத்து விட்டு செல்ல அர்ஜுன் இதைக் கேட்டு அதிர்ச்சியடைகின்றார். பி்னர் கோாவிலில் கோதை இருக்க அங்கு சரஸ்வதி வர தமிழ் வரமாட்டான் என்று சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க தமிழ் வந்து நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement