2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான '7ஆம் அறிவு' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இதனைத் தொடர்ந்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
இருப்பினும் இவருக்கு தமிழை விட தெலுங்கு திரை உலகில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததால், தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்ற இவர், இளம் நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார்.
இவ்வாறாக தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் தன்யா பாலகிருஷ்ணா, பிரபல தமிழ் இயக்குநர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஆனது திரை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தவகையில் 'காதலில் சொதப்புவது எப்படி', தனுஷ் நடித்த 'மாரி', 'மாரி 2' போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர இயக்குநர் பாலாஜி மோகன். இவருடன் கடந்த சில வருடங்களாக ரிலேஷன் ஷிப்பில் இருந்த தன்யா, அவரை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தனது youtube பக்கத்தில் பேசியுள்ள கல்பிகா, 'நடிகை தன்யா இயக்குநர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அத்தோடு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் அதனை அதிகாரப்பூர்வமாக இருவருமே அறிவிக்கவில்லை என கல்பிகா கூறியுள்ளது, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாது அவர் தற்போது நடித்துவரும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்றும், இதற்கு காரணம் அவருடைய கணவர் தான் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறாக கல்பிகா பேசிய வீடியோ வைரலாகி பலராலும் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதனை தன்யா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி உடனடியாக நீக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தன்யா குறித்த இந்த விடயம் தான் தற்போது தெலுங்குத் திரையுலகில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது.
Listen News!