• Sep 20 2024

அப்படி தப்பா எழுதவில்லை,சூப்பர் ஸ்டாரே ஓகே சொல்லி இருந்தார்- ஜெயிலர் பாடல் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.முதல் பாடல் காவாலா வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில் அடுத்து ஹுகும் என்ற இரண்டாம் சிங்கிள் ஹுக்கும் நேற்று வெளியாகி இருந்தது. காவாலா பாடல் தமன்னா டான்ஸுக்கு ட்ரெண்ட் ஆனது போல, இந்த Hukum பாடல் lyricsக்காக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

"பேரை தூக்க 4 பேர், பட்டத்தை பறிக்க 100 பேர்" என வரும் lyrics ட்விட்டரில் பேசு பொருளாகி இருக்கிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், அவரை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு வசனம் எழுதி இருக்கிறார் என சர்ச்சை எழுந்திருக்கிறது.


 இந்நிலையில் தற்போது Lyricist சுப்பு அளித்திருக்கும் பேட்டியில் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்றும், அவர் கெத்து என்று தான் எழுதி இருக்கிறேன், மற்றவர்கள் வெத்து என ஒரு இடத்திலும் எழுதவில்லை என்றும் கூறி இருக்கிறார்.


 இப்படி சர்ச்சை வரும் என டீமில் கூட யாரும் நினைக்கவில்லை என கூறி இருக்கிறார்.மேலும் இந்த பாடலை கேட்டு சூப்பர்ஸ்டார் ரஜினியே வாய்ஸ் நோட் அனுப்பி பாராட்டி இருந்தார் என சுப்பு கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement