விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் சரி ரியாலிட்டி ஷோக்களும் சரி விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்து செல்கின்றது.அந்த வகையில் 24 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து இசைக்குடும்ப பின்னணிக் கதையைக்கொண்டு நகர்ந்து 2020 ஆம் ஆண்டு இனிதாக நிறைவு பெற்ற சீரியல் தான் மௌனராகம்.
அதற்கு பின்னர் இதன் இரண்டாம் பாகம் 01 பெப்ரவரி 2021 ஆரம்பித்து தற்போது விறுவிறுப்பான கட்டத்துடன் நகருகின்றது.அதாவது அந்த இரண்டாவது பாகத்தில் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் வளர்ந்து அவர்களின் குடும்ப பின்னணியை நோக்கி நகர்கின்றது கதை.
இந்நிலையில் இறந்து போனதாக நினைக்கும் தருண் மற்றும் வருணின் அம்மா உயிருடன் இருப்பது போலவும் அவரை வருணின் அத்தையான சீலா கடத்தி வைத்திருக்கிறார் என்பது குறித்தும் அண்மையில் காட்டப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் இந்த உண்மை ஸ்ருதிக்கும் அவரது கிராண்மா கூறிவிடுகின்றார்.உடனே ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வருண் இருக்கும் அம்மா வீட்டிற்கே இருவரும் வந்து விட வேலைக்காரி இல்லாத நேரம் பார்த்து இருவரும் உள்ளே நுழைந்து விடுகிறார்கள்.
அதன் பிறகு இவங்களை உடனே நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு போயிடலாம் என ஸ்ருதி கூற ஷாக்கடைகின்றார் கிராண்மா.இவங்க மட்டும் வீட்டிற்கு வந்தால் இப்ப இருக்கிற பிரச்சனை எல்லாம் சரியாகிடும்.அவர் எல்லாத்தையும் மறந்து ஏத்துக்குவார் என ஸ்ருதி கூறுகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ....
Listen News!