தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் மகேஷ்பாபு.தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் இவரது அம்மா இந்திராதேவி காலமாகியுள்ளார்.இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவி ஆவார்.இவர்களுக்கு மகேஷ் ,ரமேஷ் என்ற இருமகன்களும் மஞ்சுளா, பிரியதர்ஷினி, பத்மாவதி என மூன்று மகள்களும் உள்ளனர்.
இன்று காலை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இந்திராதேவியின் உயிர் பிரிந்தது. இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும குறிப்பிடத்தக்கது.
Listen News!