தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவரக்குளக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்தோடு இவர்கள் அடிக்கடி மேதலில் ஈடுபட்டு வருவதும் உண்டு.
இவர்கள் இருவரின் திரைப்படங்கள் பல வருடங்கள் கழித்து ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. அதன்படி வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
ஆனால் திடீரென துணிவு படக்குழுவும் பொங்கல் பண்டிகையில் இப்படம் வெளியாகும் என அறிவித்தனர். இதற்கிடையே இரண்டு திரைப்படங்கள் ஒரே தேதியில் வெளியாகாமல் வெவ்வேறு தேதியில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
தற்போது வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிடுவதால், துணிவு திரைப்படம் வெளியாகும் அதே 12- ஆம் தேதியில் வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரிய சம்பவம் ஒன்று இருக்கு என ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!