ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் சரிகமப சீசன் 3.அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த சீசனில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் அசானி ஆகியோர் பாடி வருகின்றனர்.இவர்கள் இருவரில் யார் பைனலிஸ்டாக போவார்.யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இந்த வாரம் நடுவர்களாக நடிகை சங்கவி மற்றும் லைலா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.தல தளபதி Round என்பதால் பலரும் அவர்களின் பாடலையே பாடி வந்தனர். அந்த வகையில் கில்மிசா மெர்சல் படத்தில் இடம் பெற்ற நீதானே நீ தானே பாடலைப் பாடியுள்ளார்.
இதனைப் பார்த்த லைலா, கில்மிசா லைலாவைப் பாராட்டியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.
Listen News!