விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமானது கடந்த 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியானது. இப்படமானது அதே சமயத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்திற்கு இணையாக அதிக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.
அதாவது வெறும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.63 கோடி வரையிலும், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படமான 'தளபதி67' படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது விஜய் 46வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் டீக்கடை ஓனராக பகவது படத்தில் நடித்தது போன்று இதிலும் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடத்தி வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பியை கொலை செய்ய, அதன் பின்பு தான் ஒரு ரௌடியாக அவதாரம் எடுத்தார்.
அதே போன்று தான் தளபதி67 படமும் சின்ன சின்ன மாற்றத்தோடு வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகுவதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
அதுமட்டுமல்லாது இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அத்தோடு இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
எது எவ்வாறாயினும் தளபதி67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் தளபதி67 படமானது வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!