தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில் வாரிசு படம் வெளியாகி இருந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் 'தளபதி 67' இல் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனைத் தொடர்ந்து அப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதில் நீண்டகால இடைவெளியின் பின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க இருக்கின்றது.
மேலும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீரில் தங்கி முகாமிட்டுள்ளனர். அத்தோடு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார் அப்படத்தினுடைய இயக்குநர் லோகேஷ்.
இந்நிலையில் படத்தின் பெயர் பற்றிய விவரம் ஒன்று தற்போது டுவிட்டரில் வலம் வருகிறது. அதாவது 'தளபதி 67' என அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு 'குருதிப்புனல்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
Listen News!