தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து தற்பொழுது கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தான் சந்தான். இவர் தற்பொழுது மனோஜ் பீதா என்பவர் இயக்கி தயாரித்துள்ள ஜென்ட் கண்ணாயிரம் என ரீமிக்ஸ் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதால் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சந்தானம், நடிகை ரியா சுமன், இயக்குனர் மனோஜ் பீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய இயக்குநர், இந்த திரைப்படத்தில் சந்தானம் நகைச்சுவை ஃபார்முலாவை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறினார்.மேலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை விடாப்படியாக இருந்து சாதித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் தெலுங்கில் இருந்ததைவிட இங்கே சில மாற்றங்கள் செய்து ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தை எடுத்திருப்பதாகவும், அது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் எனவும் மனோஜ் பீதா குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், இந்த திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளில் கவுன்டர் (Counter) வசனங்களை சேர்க்க தான் முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு இயக்குநர் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேசமயம் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருப்பதாகவும் பேசினார். அதேபோல் சீரியசான திரைப்படங்களில் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, அடுத்து சீரியஸான படங்களை தவிர்த்துவிட்டு, தன்னுடைய ஃபார்முலாவில் நான்கு படங்கள் நடிக்க உள்ளதாக கூறினார். அதன் பிறகு மீண்டும் சீரியசான படங்களில் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், தெலுங்கு திரையுலகில் நேரடி படங்களுக்கு மட்டுமே பண்டிகை நாட்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவு பற்றிய உங்கள் பார்வை என்ன என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்தானம், தமிழ் படங்கள் வெளியாகும் போது, இங்கு நம் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுபோலதான் அந்தந்த மொழி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த படம் நன்றாக இருக்கிறதோ அந்த படம் ஓடும் என தெரிவித்தார்.
Listen News!