• Sep 20 2024

படப்பிடிப்பை நிறுத்தி விட்டு மகேஷ்பாவின் திரையரங்கில் படம் பார்த்த தளபதி விஜய்- அதுவும் என்ன படம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘வரிசு’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகின்றது.

மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் 75வது சுந்திர தினம் கொண்டாடப்பட்டது.அதற்கு பிரபலங்கள் பலரும் கொடியேற்றிச் சிறப்பித்தனர்.விஜய்யும் தனது வீட்டில் கொடியேற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார்.


மேலும் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடத்தி வரும் திரையரங்கிற்குச் சென்று நந்தமுரி கல்யாண் ராம் நடித்த ‘பிம்பிசாரா’ படத்தை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் படப்பிடிப்பிற்கு இடைவெளி விட்ட பின்னரே அவர் நடிக்க சென்றதாக கூறப்படுகின்றது.

சமீபத்தில், 'வரிசு' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக ஊடகங்களில் கசிந்தன, மேலும் அதில் பிரபு நடிக்கும் கதாபாத்திரம் தெரியவந்தது. அந்த வீடியோவில் பிரபுவை டாக்டராகவும், சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் சித்தரித்து இருந்தது.

தொடர்ந்து, படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல வீடியோக்கள் கசிந்து வருகின்றன, மேலும் ஆன்லைனில் பகிரப்படும் வீடியோக்கள் குறித்து தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். படப்பிடிப்பின் செட் அருகே போன் வேண்டாம் என்ற கொள்கையை அமல்படுத்த இயக்குநரும் தயாரிப்பாளரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement