• Sep 20 2024

சரஸ்வதி தான் தன் பொண்டாட்டி என்று மேக்னாவிடம் சொன்ன தமிழ்- அதிர்ச்சியில் உறைந்த நமச்சி- Thamizhum Saraswathiyum Serial

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுன் கம்பனியில் இருந்து வேலைக்கு எடுக்கச் சொல்லி இன்னும் சிலர் தமிழ் வீட்டுக்கு வருகின்றனர். தங்களையும் வேலைக்கு எடுக்கச் சொல்கின்றனர். ஆனால் தமிழ் அப்படி வேலைக்கு எடுத்தால் ரொம்ப பிரச்சினை ஆகிடும் இப்போ தான் 100 பேரை எடுத்தோம். திரும்ப எங்களால் எடுக்க முடியாது என்கின்றார்.

அப்போது நடேசன்,தமிழிடம் இவர்களை வேலைக்கு எடுக்கச் சொல்கின்றார்.தொடர்ந்து வீட்டில் இருக்கும் மேக்னா தமிழ் வீட்டுக்கு போய்ட்டு வருவோம் என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல அவரும் மேக்னாவை அழைத்துக் கொண்டு தமிழ் வீட்டுக்கு போகின்றார்.


தமிழ் வீட்டுக்கு மேக்னா வந்திருப்பதைப் பார்த்த நமச்சி, தமிழும் சரஸ்வதியும் சேர்ந்தெடுத்த போட்டோக்களை எல்லாம் எடுத்து ஒழித்து வைக்கின்றார்.அத்தோடு தமிழ் சரஸ்வதிக்கு தாலி கட்டும் போட்டோவையும் எடுத்து மறைத்து வைக்கின்றார். மேக்னா எல்லோரிடமும் பேசிட்டு இருக்கிறார்.

அப்போது அவரது அம்மா தமிழுக்கு பொண்ணு பார்க்க போறேன் என்று சொல்ல தமிழ் எனக்கு பொண்ணு பார்க்கப்போறீங்களா எனக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே சரஸ்வதி தானே என் பொண்டாட்டி எங்களுக்கு குழந்தையும் பிறக்கப்போகுது என்கின்றார். இதைக் கேட்ட மேக்னா அதிர்ச்சியடைகின்றார்

கோதையும் தமிழ் பொண்டாட்டி தான் சரஸ்வதி உங்க வீட்டுக்கு கூட ரெண்டு பேரும் சேர்ந்து தானே வந்திருந்தாங்க என்று சொல்ல,அந்த நேரம் தமிழ், சரஸ்வதிக்கு தாலிகட்டிய போட்டோ கீழே விழ அதை மேக்னா துாக்கி வைத்துப் பார்க்கின்றார்.தொடர்ந்து யார் தமிழுக்கு கல்யாணம் ஆகல என்று சொன்னது என்று கேட்க நமச்சி தான் சொன்னதாக சொல்கின்றனர்.நமச்சியும் தான் சொன்னதை சம்மதிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement