• Sep 21 2024

பொய் சொல்லி சரஸ்வதியிடம் சிக்கிக் கொண்ட தமிழ்- அர்ஜுன் பற்றி வெளிவந்த மற்றொரு ஆதாராம்- கோதை எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சரஸ்வதி கோயிலுக்குச் சென்று தமிழ் என் மேல கோபமாக இருக்கிறார்,வீட்டி சாப்பிடாமல் இருக்கிறார் அவர் கோபத்தை அதிகமாக்க வேணாம் என்று தான் விரதம் இருக்கல என்று சாமி கிட்ட வேண்டிட்டு இருக்கிறார். மறுபுறம் அதே கோயிலுக்கு வந்த தமிழ் சரஸ்வதி விரதம் இருந்தால் அவ உடம்பு கெட்டிடும் அதனால தான் தான் விரதமிருப்பதாக சொல்லி விட்டு விளக்கேற்றுகின்றார்.


தமிழ் விளக்கேற்றுவதைப் பார்த்த இரண்டு பெண்கள் இந்த காலத்திலையும் அப்பிடி ஒரு ஆம்பிளையா, குழந்தை கிடைக்கனும் என்பதற்காக தான் விளக்கேற்றுராரே என்று தமிழைப் பற்றி பெருமையாகப் பேச சரஸ்வதி யார் என்று போய் பார்க்கிறார். அது தமிழ் என்று தெரிந்ததும் ஆச்சரியப்படுகின்றார். மேலும் சரஸ்வதியைக் கண்டவுடன் சமாளிக்கின்றார்.

தொடர்ந்து  நடேசன் கோதை வசு ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அர்ஜுன் திரும்பவும் தப்பிச்சிட்டானே என்று நடேசன் சொல்ல, கோதை இல்லைங்க ராகினிக்கு இப்போ சின்னதா சந்தேகம் வந்திருக்கு, இன்னும் ஒரு நாள் தான் இருக்கு அதுக்குள்ள எப்பிடியாவது ஒரு ஆதாரத்தை கொண்டு வந்து அர்ஜுனை வீட்டை விட்டுத் துரத்தனும் என்று சொல்கின்றார்.


மறுபுறம் அர்ஜுன் தன்னுடைய குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது அர்ஜுனிடம் நாளைக்கு கோதைக்கு கொடுக்கப்போகின்ற சர்ப்ரைஸ் என்ன என்று கேட்கின்றனர். அர்ஜுன் இப்பவே சொன்னால் அது சர்ப்ரைஸ் இல்லையே, நாளைக்கே சொல்கின்றேன் என்று கூறுகின்றார்.அத்தோடு ராகினி குழப்பத்தில தான் இருக்கிறா, அவளை நான் எப்பிடியாவது சமாளித்து விடுவேன் என்றும் சொல்கின்றார்.

தொடர்ந்து வசு அர்ஜுன் போனிலிருந்து இன்னொரு ஓடியோ இருக்குது அது யாரே சேகர் கிட்ட பேசின ஓடியோ என்று சொன்னதால் நமச்சி காட்டிஸ்க்ல வீடியோ எடுத்து தருவதாகக் கூறி ஏமாற்றிய சேகர் வீட்டுக்குச் சென்று அந்த ஓடியோவைப் போட்டுக் காட்டி உண்மையைச் சொல்லு என்றதும் இவர் தான் அர்ஜுனிடம் 10 லட்சம் பணம் வாங்கி அந்த வீடியோவை அழித்து விட்டதாகக் கூறுகின்றார்.


இந்த விஷயத்தை நமச்சி வந்து கோதையிடம் சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார். மேலும் எப்பிடியாவது ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்து அர்ஜுன் பற்றிய உண்மைகளை கொண்டு வரனும், அவனை கம்பெனியில் இருந்து துாக்கனும் என்று சொல்கின்றார். அத்தோடு வசுவின் தம்பியும் அந்த வீடியோவை கட்டாயம் திரும்ப எடுத்து தருவேன் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement