• Sep 21 2024

"நன்றி கமல் சார், நன்றி இமான் சார்"….மனமுருகச் செய்த திருமூர்த்தியின் டிவிட்டர் பதிவு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

"கண்ணான கண்ணே.." என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் திருமூர்த்தி. பார்வையற்ற இளைஞரான இவர் இப்பாடலைத் தொடர்ந்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வேறு சில பாடல்களையும் பதிவிட்டு வந்திருக்கின்றார். இவரது குரலில் வசீகரிக்கப்பட்ட டி.இமான் அவர்கள் தன்னுடைய இசையில் 'சீறு' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இணையத்தில் தொடர்ந்து பதிவுகளை இட்டு வரும் திருமூர்த்தி தற்போதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற கமல்ஹாசன் எழுதிய 'பத்தல பத்தல..' என்ற பாடலை பாடியிருகின்றார். இப்பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ஹிட் பாடலாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமூர்த்தியின் திறமையை பார்த்து வியந்த கமல்ஹாசன் அவர்கள் அவரை பாராட்டியதோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் அவரை இணைத்து அதற்கான செலவினையும் தானே ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன்க்கும், ஈ.ஆர். ரஹ்மான்க்கும் நன்றி கூறும் வகையில் தற்போது பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதாவது 'பத்தல பத்தல' பாடலை பியானோவில் வாசித்து அந்த வீடியோவிற்கு மேலே "உலகில் உள்ள அழகான விஷயங்களை பார்க்கவோ, தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் உணர வேண்டும்… நன்றி கமல்ஹாசன் சார், மேலும் எனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய அன்பிற்கும், கருணைக்கும் இசையமைப்பாளர் டி.இமான் ஐயாக்கு நன்றி" எனக் கூறி பதிவிட்டிருக்கின்றார்.

திருமூர்த்தியின் இந்தப் பதிவு பலரை மனமுருகச் செய்ததோடு மட்டுமல்லாமல் அவரின் திறமையை பார்த்து பலர் வியந்தும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement