• Sep 20 2024

நண்பரின் உதவியுடன் ரஜனி செய்த அந்த செயல்-திடீரென கூட்டாக பிடிபட்ட சம்பவம்..இறுதியில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினி தன் ஆரம்பகாலகட்டத்தில் ஸ்டார் ஹோட்டலில் சந்தித்த அவமானம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

 வயது வித்தியாசமின்றி ரசிகர்களை கொண்டவர் தான் ரஜினி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரஜினியின் படத்தை ரசித்து பார்ப்பார்கள். எனினும் அதன் காரணமாகவே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகின்றார் ரஜினி.

இவ்வாறுஇருக்கையில்  ரஜினி தற்போது ஒரு வெற்றிக்காக போராடி வருகின்றார். சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனவே தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தை மிகவும் நம்பியுள்ளார் ரஜினி.

அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ரஜினி. எனினும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  இன்று ரஜினி தனது 72 ஆவது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதையடுத்து தற்போது ரஜினி ஆரம்பகாலத்தில் சந்தித்த ஒரு சம்பவம் பற்றிய தகவல் வந்துள்ளது.

அதாவது ரஜினி சென்னை வந்த துவக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து தங்கியுள்ளார். அந்த சமயத்தில் ரஜினியின் நண்பர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது ரஜினி அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று தன் நண்பரின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் சாப்பிடுவாராம்.

ஒரு நாள் அவ்வாறு சாப்பிடும்போது அந்த ஹோட்டலின் மேனேஜர் பார்த்துவிட்டு ரஜினியை அவமானப்படுத்திவிட்டாராம். இதனால் ரஜினி மிகவும் காயப்பட்டிருக்கின்றார். எனினும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி பெரிய ஸ்டார் ஆனபிறகு தன்னுடைய திருமண வரவேற்பை அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் நடத்தியுள்ளார். அத்தோடு பலருக்கும் தெரியாத இந்த சம்பவம் தற்போது செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement