வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, தான் யாரை போட்டியாக நினைக்கிறேன் என்பதை மனம்திறந்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவரும் பேசி முடித்ததை அடுத்து நடிகர் விஜய் இறுதியாக மேடை ஏறி பேசினார். மேலும் அவர் பேச வந்ததும் ரசிகர்களை பார்த்து ரஞ்சிதமே பாடல் ஸ்டைலில் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இறுதியாக நான் ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் கிடைத்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து பேச ஆரம்பித்த அவர், விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் வழங்குவது தனக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். ரத்தத்திற்கு தான் சாதி தெரியாது, இந்த நல்ல குணத்தை நாம் ரத்தத்தில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என கூறிய அவர், ரசிகர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்புதான் தனக்கு போதை என கூறினார்.
நான் 1990-ல் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக வந்தார். இதன் பின்னர் போகப்போக அவர் என்னுடைய சீரியஸ் ஆன போட்டியாளராக மாறினார். இதையடுத்து நானும் தொடர்ந்து கஷ்டப்பட்டு ஓடினேன். அந்த நடிகரை விட எப்படியாவது அதிக வெற்றி பெற வேண்டுமென்று கடுமையாக போராடினேன். நம்ம எல்லாருக்கும் அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். நீங்கள் உங்களுடன் போட்டி போடுங்கள் என்று கூறினார்
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “நம்ம போகின்ற பாதை நிறைவா இருக்கணும்னா நாம தேர்ந்தெடுக்கிற பாதை சரியா இருக்கணும். நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றியை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.” என பேசினார்.
Listen News!