நடிகர் மற்றும் பிரபல பத்திரிகையாளராக திகழ்பவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான "முந்தானை முடிச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.
இதனையடுத்து பல படங்களில் துணை கதாபத்திரங்களில் நடித்து வந்தார். எனினும் சமீபகாலமாக இவர் படங்களை மற்றும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி சர்ச்சைகளை மாட்டிக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
எனினும் சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியான "இரவின் நிழல்" படத்தில் முக்கியமான ரோலில் நடித்தவர் தான் ரேகா நாயர். இவரை குறித்து பயில்வான் மோசமாக பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் நடு ரோட்டில் சண்டை போட்டு கொண்டனர்.
இவ்வாறுஇருக்கையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர், " எனக்கு உண்மையான தீபாவளி எப்போது என்றால் பயில்வான் ரங்கநாதன் எப்போது சாகுறானோ அன்று தான். என்னை குறித்து மோசமாக பேசுவதால் பயில்வான் ரங்கநாதனுக்கு என்ன கிடைக்கப்போகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Listen News!